கவிப்புயலின்காதல் வெண்பா

காதல் வெண்பா 
….. 

இனியவன் காதல் வெண்பா

…..
எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது – இதயம் 
அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ 
பூவுக்குள் உதயமாகியவள் – நீ அனுமதித்தால் 
பூ மாலையாக மாற துடிக்கிறேன் ….!!!. 

….

அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே 
அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே 
உள்ளம் ஒரு காதல் கோயிலடி – அதில் நீ 
உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி….!!! 

…..

சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து 
கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை 
சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை 
சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் …..!!! 

….

விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ 
விழி மூடாமல் என்னை செய்து விட்டாய் 
தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன் 
திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் …? 

….

காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக 
காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை 
மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல் 
மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு…!!! 


கவி நாட்டியரசர் இனியவன் 
காதல் வெண்பா
…. 

முதல் அடியின் ஓசை இரண்டாம் அடியிலும் வரவேண்டும் 

Published by கவிப்புயல் இனியவன்

இயற்கையோடு வாழுங்கள் இயற்கையாக வாழுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக

Design a site like this with WordPress.com
தொடங்கவும்