காதல் வெண்பா
…..
இனியவன் காதல் வெண்பா
…..
எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது – இதயம்
அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ
பூவுக்குள் உதயமாகியவள் – நீ அனுமதித்தால்
பூ மாலையாக மாற துடிக்கிறேன் ….!!!.
….
அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே
அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே
உள்ளம் ஒரு காதல் கோயிலடி – அதில் நீ
உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி….!!!
…..
சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து
கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை
சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை
சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் …..!!!
….
விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ
விழி மூடாமல் என்னை செய்து விட்டாய்
தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன்
திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் …?
….
காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக
காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை
மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல்
மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு…!!!
&
கவி நாட்டியரசர் இனியவன்
காதல் வெண்பா
….
முதல் அடியின் ஓசை இரண்டாம் அடியிலும் வரவேண்டும்